Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார்: பிரபல நடிகையின் கணவர் பேட்டி
மும்பை: தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார் என்று நடிகை அனிதா பற்றி அவரின் கணவர் ரோஹித் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் அனிதா ஹசநந்தனி. சாமுராய், சுக்ரன், நாயகன், மஹாராஜா ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
நாகினி 3 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிதா. இந்நிலையில் அவர் தனது கணவர் ரோஹித் ரெட்டியுடன் சேர்ந்து நாச் பால்யே 9 டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் அனிதா சூனியக்காரியாகவும், கணவர் அவரால் பாதிக்கப்படுபவராகவும் நடித்து, நடனமாடி நடுவர்கள், பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றார்கள்.
View this post on InstagramA post shared by Anita H Reddy (@anitahassanandani) on
நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே. அதற்கு அந்த அளவுக்கு வரவேற்பு இருக்காது என்று உங்களுக்கு தெரியாதா என நாச் பால்யே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மனிஷ் பால் அனிதாவிடம் கேட்டார். அதற்கு அனிதாவின் கணவர் கூறியதாவது,
ஏ ஹைன் மொஹப்பதைன் தொலைக்காட்சி சீரியலில் அனிதா ஷகுன் என்கிற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரத்தில் நடித்த முதல் 6 மாதங்கள் தினமும் அழுது கொண்டே வீட்டிற்கு வருவார்.
நான் கெட்டவளாக நடிப்பதால் நிறைய நெகட்டிவ் கமெண்ட் வருகிறது, சமூக வலைதளங்களில் தினமும் கலாய்க்கிறார்கள் என்று கூறி அழுவார். சில சமயம் அவருக்கு மிரட்டல் விடுத்து இமெயில்கள் கூட வந்துள்ளது என்றார்.
நாச் பால்யே நிகழ்ச்சியில் 5 முன்னாள் காதல் ஜோடிகள், 5 தற்போதைய ஜோடிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் அனிதாவுக்கு தான் அதிகம் சம்பளம் என்று கூறப்படுகிறது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே