யார்க்கிட்ட.. விடும் சனம் அன்ட் அனிதா.. கடுப்பான ரியோ.. ஓடிரு என வார்னிங்.. மிரளவிடும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் சனமும் அனிதாவும் சேர்ந்து ரியோவை கட்டம் கட்டுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ரியோ, கால் செண்டர் ஊழியரான அஜித்திடம் போனில் பேசினார்.
அப்போது அனிதா, சனம் நாங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸுன்னு சொல்லும் போது அதில் ஒரு அன்பு அழகாய் தெரிகிறது என்று ஆஜித்திடம் கூறினார்.

ரியோவிடம் ஆர்க்யூ
இதனை வைத்துதான் இருவரும் அப்படி ஆர்க்யூ செய்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் இந்த வீட்டில் அன்பாய் இருக்கிறோமா? வேறு யாரும் இல்லையா என கேட்டு ரியோவை சனம் ஷெட்டியும் அனிதாவும் வச்சு செய்கின்றனர்.

யாருக்கு இருக்கணும்?
இதில் பேசும் சனம் இமேஜ் கான்ஷியஸ் யாருக்கு அதிகமா இருக்கணும் எனக்கா உங்களுக்கா? கூடவே சேர்ந்த அனிதா, இங்கே இமேஜ் கான்ஷியஸா இங்க நிறைய பேர் இருக்காங்க ரியோ, நீங்களும் தான் என்கிறார்.

குறுக்கிட்ட சனம்
இதனை தொடர்ந்து கேமராவிடம் பேசும் ரியோ, நான் சனம் மற்றும் அனிதாவை பற்றி நான் ரொம்ப தப்பா பேசிட்டேன் என்கிறார். அப்போது குறுக்கிடும் அனிதா அப்போ உங்க பேரையும் சேர்த்து சொல்லுங்க என்னை மாதிரி அனிதா, என்னை மாதிரி சனமும் நினைக்கிறாங்கன்னு சொல்லுங்க என்கிறார்.

சனமை எச்சரித்த ரியோ
அதை அப்படியே கேமராவிடம் சொல்கிறார் ரியோ. இருப்பினும் விடாது சனம் அடுத்தவங்க ஃபிரண்ட்ஸ் ஆகுறது இயற்கையானது.. அப்போ நாங்க என்ன மான்ஸ்டர்ஸா என்று கேட்கிறார். இதனால் கடுப்பாகும ரியோ, நீ கேட்டதுக்கு நிறைய பதில் சொல்லிட்டேன்.. ஓடிறு என சனம் ஷெட்டியை எச்சரிக்கிறார் இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











