twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருக்கும் சுயபுத்தியே கிடையாது.. எல்லாரும் என்ன கார்னர் பண்றாங்க.. மீண்டும் வேலையை ஆரம்பித்த அனிதா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத், எல்லோரும் தன்னை கார்னர் செய்வதாக மீண்டும் புலம்ப தொடங்கியுள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத், தன்னை எப்படி காட்டுவார்கள், தன்னை பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதில் ரொம்ப கவனமாய் இருக்கிறார்.

    தான் ஏதாவது செய்தால் தான், புரமோவில் வருவோம், கன்டென்ட் கொடுத்தால் தான் வீட்டில் நீடிக்க முடியும் என்ற எண்ணத்தில் உள்ள அனிதா நாள் தோறும் ஒரு பிரச்சனையை கிளப்பி வருகிறார்.

    இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்!இவ்ளோ நாள் பாத்துக்காம இருந்ததேயில்ல.. பிக்பாஸ் வீட்டுக்குள் பொண்டாட்டி.. உருகும் பிரபலம்!

    போக வேண்டும்

    போக வேண்டும்

    இந்நிலையில் சனிக்கிழமை டாஸ்க்கில் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டில் நீடிக்க வேண்டும், பிக்பாஸ் வீட்டில் இருந்து போக வேண்டும் என டிக் அன்ட் க்ராஸ் டாஸ்க் கொடுத்தார் கமல்.

    ஃபீல் பண்ணுகிறார்

    ஃபீல் பண்ணுகிறார்

    அப்போது சம்யுக்தா, கேபி, ஷிவானி உள்ளிட்டோர் அனிதா எப்போதும், எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கிறார், நாமினேஷனில் வந்தால் கூட ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார் என குற்றம்சாட்டினர்.

    ஆரியிடம் புலம்பல்

    ஆரியிடம் புலம்பல்

    இதன் தொடர்ச்சி இன்றைய எபிசோடில் காட்டப்பட்டது. அப்போது தனக்கு க்ராஸ் மார்க் கொடுத்ததை ஏற்க முடியாத அனிதா, கிட்சனில் இருந்த ஆரியிடம் புலம்பி தீர்த்தார்.

    நான் யோசித்தால் என்ன

    நான் யோசித்தால் என்ன

    காரணம் சொல்ல முடியாததால் தன்னை ஓவர் திங்க்கிங் என்று சொல்லி கார்னர் செய்கிறார்கள். நான் எதையோ யோசிக்கிறேன் இவர்களுக்கு என்ன வந்தது. என் அப்பா அம்மாவை பற்றி யோசிப்பேன், என் புருஷனை பற்றி யோசிப்பேன் இவர்களுக்கு என்னவாம்.

    நான் பாயிண்ட்டா பேசுறேன்

    நான் பாயிண்ட்டா பேசுறேன்

    என்னை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என பார்க்கிறார்கள். சுய புத்தியே கிடையாது. பாயிண்ட்டா பேசுறவங்கள வெளியே அனுப்பிட்டா ஈசியா விளையாடலாம்னு பாக்குறாங்க இவ்வாறு ஆரியிடம் புலம்பி தீர்த்தார் அனிதா.

    அர்ச்சனா மீது புகார்

    அர்ச்சனா மீது புகார்

    தொடர்ந்து கிட்சனுக்கு வந்த ரியோவை உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து சென்ற அனிதா, அர்ச்சனா அக்காவும் நானும் யோசிக்கிறேன் என்று சொல்கிறார். எல்லாரும் அப்படி சொன்னதால்தான் அப்செட்டாகி ஓரமாய் உட்காந்திருந்தேன்.

    முறைக்கிறார் அனிதா

    முறைக்கிறார் அனிதா

    அப்போது வந்து ஏன் இப்படி உட்காந்திருக்கிறாய், எல்லோரும் இப்போதுதானே சொன்னார்கள் என கேட்டார். நான் என் இயல்பே இதுதான் என்றேன். அதற்கு முறைத்து விட்டு போகிறார் என அர்ச்சனா மீது புகார் கூறினார்.

    அர்ச்சனாவிடம் ஆர்க்யூ

    அர்ச்சனாவிடம் ஆர்க்யூ

    தொடர்ந்து, அர்ச்சனாவிடமும் அது குறித்து ஆர்க்யூ செய்தார் அனிதா. அப்போது நான் அதையெல்லாம் நினைக்கவில்லை, நான் வேறு எதையே நினைத்துக்கொண்டிருந்தேன் என்றார். ஆனாலும் அனிதா விடாமல் தனது கற்பனைப்படியே பேசினார்.

    என்னால் நிறுத்த முடியாது

    என்னால் நிறுத்த முடியாது

    அதற்கு உன் கற்பனையே என்னால் நிறுத்த முடியாது என்றார் அர்ச்சனா. அப்போதும் ஈசியா சொல்லிடுங்க கற்பனை என்று என கூறியப்படியே சென்றுவிட்டார் அனிதா. மொத்தத்தில் தன் மீதான எந்த விமர்சனத்தையும் அனிதாவால் ஏற்க முடியவில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

    English summary
    Anitha anger over house mates given her cross mark. She start to blabbering to evryone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X