Don't Miss!
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அரசே.. அனிதா போன்று எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..?
சென்னை: மத்திய அரசே... மாநில அரசே... இன்னும் எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..? என்று இயக்குனர் ராஜு முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மருத்துவராக ஆசைப்பட்ட ஏழை மாணவி அனிதா நீட் தேர்வால் தனது கனவு நிறைவேறாது என்பதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.
இந்நிலையில் ஜோக்கர் பட புகழ் இயக்குனர் ராஜு முருகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அனிதா பற்றி போஸ்ட் போட்டுள்ளார்.
அனிதா
தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராடிய சகோதரி அனிதாவை, நீட் என்னும் மனுதர்ம பீடம் பலி வாங்கிவிட்டது. சாதியாலும் வறுமையாலும் ஒடுக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளின் கல்வி கனவுகள் தொடர்ந்து தூக்கில் தொங்குகின்றன.
உயிர்கள்
மத்திய அரசே... மாநில அரசே... இன்னும் எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டும் உங்கள் புதிய இந்தியாவில் புதைக்க..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ராஜு முருகன்.
புதிய இந்தியாவா?
நம்முடைய தேவைகளை போராட்டத்தினாலும், மரணத்தினாலும் நமக்கு கிடைக்க செய்வது தான் புதிய இந்தியாவா😓😓😓 என்று ராஜு முருகன் போஸ்ட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
பிள்ளைகள்
எத்தனை பிள்ளைகளின் உயிர்கள் வேண்டுமென்று விளையாட்டுக்கு கூட கேட்டுவிடாதீர்கள் ......!!!!
கண்டிப்பாக அவர்கள் புதைத்தே விடுவார்கள் ...!!!!! என மற்றொருவர் கமெண்ட் போட்டுள்ளார்.