Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாத்ரூமுக்குள் கேவி கேவி அழுத அனிதா சம்பத்.. பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்.. என்னாச்சுன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாத்ரூமுக்குள் அமர்ந்து அனிதா சம்பத் கேவி கேவி அழுத சம்பவம் ஹவுஸ்மேட்ஸ்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிலும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் நேற்று நடந்த பிரச்சனையையே தொடர்ந்தார்.
பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமுக்குள் அமர்ந்து கோவென அழுதுக் கொண்டிருந்தார். அழும் சத்தத்தை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் யார் உள்ளே அழுகிறார் என்று தெரியாம்ல் சில நிமிடம் குழம்பினர்
வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா!
பாத்ரூமுக்குள் அழுகை
பின்னர் அனிதாதான் என்பதை உறுதி படுத்திக் கொண்டு ரியோ, நிஷா, ஆரி, சோம் உள்ளிட்டோர் அவரை வெளியே அழைக்க முயற்சித்தனர். ஆனால் கதவை திறக்காமல் வேக வேகமாக அழுது கொண்டிருந்தார் அனிதா.
ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே
பின்னர் ஒரு வழியாக நிஷாவின் கோரிக்கையை ஏற்று கதவை திறந்த அனிதா, சுரேஷ் என்னை கன்டென்ட்டுக்காக பயன்படுத்தி கொள்கிறார். நான் சாரி சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. சனம் வாடா போடா என்றெல்லாம் பேசினார்.
அவருக்கு சப்போர்ட் பண்றீங்க
அவக்கிட்ட மட்டும் பேசுகிறார். நான் என்ன அவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டேன். நான் செய்தித்துறையில் இருந்து வந்துள்ளேன். நான் ஒரு ஜர்னலிஸ்ட் நான் இதற்காக தான் போராட்டம் பண்ணியிருக்கேன். அவருக்கு மட்டும் எல்லாரும் சப்போர்ட் பண்றீங்க.
கேம் புரியவில்லை
எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. நான் பேசியது சரியென்று யாரும் சொல்லவில்லை. எனக்கு இந்த கேம் புரியவில்லை. நான் இங்கு வந்திருக்க கூடாது என்று அழுதார். தொடர்ந்து வெளியில் வந்த அவரிடம் ஆரி, சோம், பாலா, சனம் ஆகியோர் விசாரிக்க என்னை பேசக்கூடாது என்று சொல்லாதீர்கள்.
கொட்டித்தீர்த்தார்
நான் பேசுவேன் பேசுவது என் உரிமை. என்னை வில்லி போல் காட்டாதீர்கள். நான் வெளிப்படையாக பேசுவதுதான் இங்கு பிரச்சனை. இங்கு வெளிப்படையாக பேசக்கூடாது.
என் புருஷன பத்திதான் எனக்கு கவலையே. அவன் பேச்ச மீறி நான் இங்கு வந்திருக்க கூடாது என கொட்டித்தீர்த்தார்.