Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பாத்ரூமுக்குள் கேவி கேவி அழுத அனிதா சம்பத்.. பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ்.. என்னாச்சுன்னு பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் பாத்ரூமுக்குள் அமர்ந்து அனிதா சம்பத் கேவி கேவி அழுத சம்பவம் ஹவுஸ்மேட்ஸ்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிலும் அனிதா சம்பத், சுரேஷ் சக்கரவர்த்தியுடன் நேற்று நடந்த பிரச்சனையையே தொடர்ந்தார்.
பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமுக்குள் அமர்ந்து கோவென அழுதுக் கொண்டிருந்தார். அழும் சத்தத்தை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் யார் உள்ளே அழுகிறார் என்று தெரியாம்ல் சில நிமிடம் குழம்பினர்
வாடா போடான்னு பேசியதை விட நான் ஒன்னும் அசிங்கப்படுத்தல.. ஆரியிடம் சுரேஷ் குறித்து எகிறிய அனிதா!
பாத்ரூமுக்குள் அழுகை
பின்னர் அனிதாதான் என்பதை உறுதி படுத்திக் கொண்டு ரியோ, நிஷா, ஆரி, சோம் உள்ளிட்டோர் அவரை வெளியே அழைக்க முயற்சித்தனர். ஆனால் கதவை திறக்காமல் வேக வேகமாக அழுது கொண்டிருந்தார் அனிதா.
ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே
பின்னர் ஒரு வழியாக நிஷாவின் கோரிக்கையை ஏற்று கதவை திறந்த அனிதா, சுரேஷ் என்னை கன்டென்ட்டுக்காக பயன்படுத்தி கொள்கிறார். நான் சாரி சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே. சனம் வாடா போடா என்றெல்லாம் பேசினார்.
அவருக்கு சப்போர்ட் பண்றீங்க
அவக்கிட்ட மட்டும் பேசுகிறார். நான் என்ன அவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டேன். நான் செய்தித்துறையில் இருந்து வந்துள்ளேன். நான் ஒரு ஜர்னலிஸ்ட் நான் இதற்காக தான் போராட்டம் பண்ணியிருக்கேன். அவருக்கு மட்டும் எல்லாரும் சப்போர்ட் பண்றீங்க.
கேம் புரியவில்லை
எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. நான் பேசியது சரியென்று யாரும் சொல்லவில்லை. எனக்கு இந்த கேம் புரியவில்லை. நான் இங்கு வந்திருக்க கூடாது என்று அழுதார். தொடர்ந்து வெளியில் வந்த அவரிடம் ஆரி, சோம், பாலா, சனம் ஆகியோர் விசாரிக்க என்னை பேசக்கூடாது என்று சொல்லாதீர்கள்.
கொட்டித்தீர்த்தார்
நான் பேசுவேன் பேசுவது என் உரிமை. என்னை வில்லி போல் காட்டாதீர்கள். நான் வெளிப்படையாக பேசுவதுதான் இங்கு பிரச்சனை. இங்கு வெளிப்படையாக பேசக்கூடாது.
என் புருஷன பத்திதான் எனக்கு கவலையே. அவன் பேச்ச மீறி நான் இங்கு வந்திருக்க கூடாது என கொட்டித்தீர்த்தார்.