Don't Miss!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- News சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோர்ட்டில் ஆஜர்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா!
சென்னை: அப்பா இறந்த சோகத்தில் மூழ்கி இருக்கும் அனிதா சம்பத், பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரமாட்டார் எனக் கூறப்பட்டது.
ஆனால், அந்த சோகத்தையும் தாண்டி அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தார்.
அனிதாவிடம் ஆரி பேசும் போது, தனக்கு வெளியே நடந்த நெகட்டிவிட்டி விஷயங்களை பற்றி எடுத்துக் கூறி புலம்பினார்.
துக்கத்துடன் நுழைந்த அனிதா
மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் சந்தோஷத்துடன் என்ட்ரி கொடுத்த நிலையில், அனிதா சம்பத், துக்கத்துடனே உள்ளே நுழைந்தார். அவரை பார்த்த அனைவருமே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவருக்கு ஆறுதல் கூறினர். தன்னை தேற்றிக் கொண்டே மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனிதா நுழைந்துள்ளார்.
பிக் பாஸ் ஆறுதல்
அனிதா சம்பத்திடம் திடீரென பேசிய பிக் பாஸ், தனது குழு சார்பாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல் என்றும் கடினமான சூழ்நிலையில், இருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும், மீண்டும் உங்களை இந்த வீட்டில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என பிக் பாஸ் அனிதாவுக்கு ஆறுதல் சொன்னார்.
ரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு
உங்களை ஷவுட் பண்ணது ரொம்பவே தப்பா ஆகிடுச்சு ஆரி.. அப்பா இறந்தது, இந்த நெகட்டிவ் ரெண்டையுமே சமாளிக்க முடியல, பிரபா தான் ரொம்பவே சமாளிச்சான். இன்பாக்ஸ்ல ஏகப்பட்ட மெசேஜ்கள் குவிந்தன. என்ன பண்றதுன்னே தெரியல என ஆரியிடம் தனக்கு நேர்ந்தவற்றை கூறி புலம்பினார் அனிதா.
பாசிட்டிவ் மட்டுமே எடுத்துக்கணும்
சமூக வலைதளத்தில் வரும் நெகட்டிவ் கருத்துக்களை எல்லாம் எடுத்துக்கவே தேவையில்லை. அதில் வரும் பாசிட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கணும், அந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தானே என ஆரி சொல்ல, அதுக்கு நான் திருந்தி மன்னிப்பு கேட்ட பிறகும் அந்த மன்னிப்பை வச்சி ரொம்பவே கிண்டல் பண்ணிட்டாங்க ஆரி என அனிதா புலம்பியது ரொம்பவே பாதித்தது.
எல்லை மீறக் கூடாது
பிக் பாஸ் போட்டியாளர்களின் கேம் பற்றி விமர்சிக்கலாமே தவிர நெட்டிசன்கள், எல்லை மீறி குடும்பத்தாரைப் பற்றியெல்லாம் இழுத்துப் பேசுவது தவறான செயல். அதை பண்ணாதீங்க என கமல் சாரே பலமுறை கூறியுள்ளார். அனிதா சம்பத் தனது அப்பாவை இழந்த நிலையில், பிக் பாஸ் பிரச்சனைகளை அவர் மேல் திணித்தது ரொம்பவே தப்பான விஷயம் தான்.
அவர்கள் நண்பர்கள்
கேங்காக சுற்றவில்லை என்றாலும், ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டி மூவருமே நல்ல நண்பர்கள். ஏன் மற்றவர்கள் கூட நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே நண்பர்களாகவே உலா வருவார்கள். ரசிகர்கள் தான் ஒரு போட்டியாளரை உயர்த்த மற்றவரை தாழ்த்தி கமெண்ட் சண்டை போட்டு வருகின்றனர். சில நேரங்களில் அவை எல்லை மீறும் போது தான் பிரச்சனையே..