Don't Miss!
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எல்லாரையும் அனுப்பிட்டு.. அவங்க மட்டும் விளையாடலாம்னு பார்க்குறாங்க.. அன்பு கேங்கால் ஆவேசமான அனிதா!
சென்னை: தனியாளாக விளையாடும் எல்லோரையும் அனுப்பிவிட்டு தாங்கள் குரூப்பாக விளையாடலாம் என இருப்பதாக அன்பு கேங் பற்றி கொட்டித்தீர்த்தார் அனிதா.
பிக்பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேறியது ரசிகர்கள் மட்டுமின்றி ஹவுஸ்மேட்டுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய எபிசோடிலும் ஹவுஸ்மேட்ஸ் சனம் எவிக்ட்டானது குறித்தே பேசினர். அதாவது, கார்டன் ஏரியாவில் ஆரி, அனிதா, பாலாஜி, ஷிவானி ஆகியோர் அமர்ந்து பேசுகின்றனர்.
திருட்டு முழியா.. ஓவராய் பேசிய ரியோ.. லிவிங் ஏரியாவில் ஓரங்கட்டிய பிக்பாஸ்.. திணறடிக்கும் அன்சீன்!
அடுத்த வாரம் நான்தான்
அப்போது பேசும் ஆரி, ஒருத்தர ஒருத்தர் காப்பாத்தி விளையாடுறாங்க. அவங்கல்லாம் உள்ள இருக்காங்க. இன்டிவிட்ஜூவலா விளையாடுறவங்கலாம் வெளியே போயிட்டு இருக்காங்க என்றார். அவரை தொடர்ந்து பேசும் அனிதா, என்ன அப்புறம் இது கேம். எதுக்கு விளையாடணும்? அடுத்த வாரம் நான்தான் போகப் போறேன்.
ஆவேசமான அனிதா
தனியா விளையாடுற ஆளுங்களையெல்லாம் அனுப்பி விட்டுட்டு அப்புறம் உட்காந்து குரூப்பா விளையாடுலாம்னு பார்க்குறாங்க. அவங்கதான் ஃபைனலிஸ்ட்ன்னு தெரியுது. அவன் அவனுக்கு அவன் வேலையே பண்ண முடியல, இதுல கேப்டனாகி என்ன பண்ணுவானுங்க என்றும் ஆவேசமாக கேட்டார்.
அவங்களுக்குதான் போடுவாங்க
தொடர்ந்து பேசிய ஆரி, இந்த வாரம் நாமினேஷன்ல டஃபான 7 பேர். எல்லாருமே ஒரு இடத்துல விளையாடுறவங்க. இன்டிவிட்ஜுவல் கேம், இன்டிவிட்ஜூவல் பிளேயர்ஸ் வெளியே போயிட்டு இருந்தாங்கன்னா.. அந்த குரூப் ஸ்ட்ராங்க் ஆயிட்டே உள்ளே இருந்துச்சுன்னா அவங்களுக்கு போடுறவங்கதான் ஓட்டு போடுவாங்க என்றார்.
பாலா பேச்சு
மேலும் சனம் வெளியே போயிட்டாங்கன்னு நான் அமைதியா உட்காந்திருந்தா நாளைக்கு எனக்கும் அதான் நடக்கும் உனக்கு அதான் நடக்கும் என்றார். இதனைக் கேட்ட பாலாஜி, இதையேதான் 2 வாரத்துக்கு முன்னாடி சொன்னேன் ஹவுஸ்ல பெரிய இம்பேலன்ஸ் வரபோகுதுன்னு என்றார்.
கொட்டித் தீர்த்தார்
தொடர்ந்து பேசிய ஆரி, ஆஜித் ரியோவ காப்பாத்துறதும், ரியோ ஆஜித்த காப்பாத்துறதும்.. என்ன கேம் இது.. டெய்லி மசாஜ் பண்ணி விடுறது, கைகால அமிக்கி விடுறதுன்னு இருந்தா அவங்க எப்படி நாமினேட் பண்ணுவாங்க. அர்ச்சான ஃபைனலுக்கு போகனும்னு விளையாடல.. என்று கூறி கொட்டித் தீர்த்தார் ஆரி.