Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொல்லாததை சொல்லி கொளுத்தி போட பார்த்த அனிதா.. வெளுத்துவிட்ட சனம்.. யாருக்கிட்ட!
சென்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரிக்கும் தனக்கும் இடையில் பற்ற வைக்க பார்த்த அனிதாவை வெளுத்துவிட்டார சனம் ஷெட்டி.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் முதல் இரண்டு செக்மெண்ட்கள் கிட்சனிலேயே கழிந்தது.
கிட்சன் டீமில் இருந்த சனம் ஷெட்டி, அனிதா, ரியோ, ஆரி ஆகியோருக்குள்ளேயே நான்சிங்காய் இருந்தது.
கிட்சன் ஏரியாவில் அமர்ந்து அனிதாவை வச்சு செய்த சோம்.. இன்னைக்குதான்ப்பா வாய திறந்திருக்காரு!
பருப்பு இல்லாமல் எப்படி?
சாப்பிடும் நேரம் வரை சமைக்காமல் என்ன செய்வது, பருப்பு இல்லை என பொங்கலுக்கு என்ன செய்வது ஏது செய்வது என பெரும் குழப்பத்தில் இருந்தார் அனிதா. பருப்பு இல்லாததால் பொங்கலுக்கு சாம்பார் எப்படி வைப்பது என பேசிக் கொண்டிருந்தனர்.
ஆரியுடன் பிராப்ளமா?
பின்னர் ஒரு வழியாக பாசிப் பருப்பை போட்டு சாம்பார் வைக்க முடிவு செய்தனர். இந்த டிஸ்கஷனின் போதே அனிதாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் முட்டிக்கொண்டது. இதனால் சனம் மீது கடுப்பில் இருந்த அனிதா, ஆரியுடன் பிராப்ளமா என கேட்டார்.
வெளுத்துவிட்ட சனம்
அதெல்லாம் இல்லை என்றார் சனம். இருந்தபோதும், ஆரி கிட்சனுக்குள் வந்ததும், சனம்க்கு உங்களுடன் பிராப்ளமா என்று கேட்டு கொளுத்திப் போட்டார். ஆனால் சனமோ, பிராப்ளம் என்று நான் எப்போது சொன்னேன்? நான் சொல்லாததை எல்லாம் எப்படி சொல்லாம் என கேட்டு வெளுத்துவிட்டார்.
என் இஷ்டம்
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அனிதா, நீங்கள் சொல்லவில்லை நான்தான் சொன்னேன் என்றார். அதற்கும் விடாத சனம், நீங்களா எப்படி சொல்லலாம் என கேட்க என் இஷ்டம் என தெனாவட்டாய் பதில் சொன்னார் அனிதா.
காலையிலேயே பரபரப்பு
அப்போது ரியோவும் சோமும் பேசுவது உங்கள் இஷ்டம் என்றால் அமைதியாய் இருப்பது எங்கள் இஷ்டம் என கூறி அனிதாவுக்கு பல்ப் கொடுத்தனர். இதனால் கோபத்தில் போய் படுத்துக்கொண்டார் அனிதா. அனிதாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பிக்பாஸ் வீட்டில் காலையிலேயே பரபரப்பு ஏற்பட்டது.