Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேரளாவில் அஞ்சான்.. 100 அரங்குகளில் வெற்றிகரமான இரண்டாவது வாரம்!
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான அஞ்சான் திரைப்படம் கேரளாவில் 100 அரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் முன்னணி நடிகர்களுக்குக் கூட கிடைக்காத ஆரம்ப வசூலை சூர்யாவின் அஞ்சான் பெற்றிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சான் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. உலகமெங்கும் 1400 அரங்குகளில் அஞ்சான் வெளியானது.
இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனால் ஆரம்ப வசூல் அபாரமாக இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். சூர்யா படங்களிலேயே அதிக ஆரம்ப வசூல் அஞ்சானுக்குத்தான்.
இந்த நிலையில், கேரளாவில் இந்தப் படம் பிரமாண்டமாய் வெளியானது. இரண்டாவது வாரத்திலும் 100 அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்தவாரம் இதே அளவு அரங்குகளில் ஓடும் என்று கேரள விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
ஓணம் பண்டிகையையொட்டி, மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், அஞ்சான் படம் இத்தனை அரங்குகளில் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழில் இந்தப் படத்தில் கிட்டத்தட்ட அரை மணி நேர காட்சிகள் குறைக்கப்பட்டு ட்ரிம்மாக்கப்பட்டுள்ளது.