சென்சார் ஆனது அஞ்சான்... எந்த வெட்டுமில்லாமல் யு சான்று!
சென்னை: சூர்யாவின் அடுத்த படமான அஞ்சான் தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. எந்தக் காட்சிக்கும் ஆட்சேபணை சொல்லாமல் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என யு சான்று அளித்துள்ளனர் தணிக்கை குழுவினர்.
சூர்யா, சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கியுள்ளார். சூர்யா படத்தை லிங்குசாமி இயக்குவது இதுதான் முதல்முறை.
பெரும் பொருட்செலவில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அதிக அரங்குகளில் வெளியாகிறது.

வழக்கமாக ரிலீசுக்கு சில தினங்களுக்கு முன்புதான் தணிக்கை குழுவுக்கு அனுப்புவார்கள். ஆனால் சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதால், ரிலீசுக்கு 15 நாட்களுக்கு முன்பே படம் தயாராகிவிட்டது. தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது.
படம் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த காட்சியையும் நீக்கச் சொல்லவில்லை. அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்பதைக் குறிக்கும் யு சான்று வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











