Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லையா அஞ்சான்?
சென்னை: சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது ரசிகர்கள் கருத்துக்களில் இருந்து தெரிகிறது.
லிங்குசாமி, சூர்யா கூட்டணியில் நேற்று வெளிநாடுகளிலும், இன்று இந்தியாவிலும் ரிலீசான திரைப்படம் அஞ்சான். மொத்தம் சுமார் 1500 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டுமே 37 தியேட்டர்களில் அஞ்சான் திரை கண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீரம், ஜில்லாவுக்கு பிறகு நீண்ட இடைவெளிவிட்டு மற்றொரு மாஸ் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கேற்பட 'நான் புறா இல்லை, கழுகு' என்பது போன்ற பஞ்ச் வசனங்களும்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
ஆனால் வெளிநாட்டு இணைய நண்பர்களும், உள்ளூரில் காலையிலேயே அடித்து பிடித்து படம் பார்க்க போன ரசிகர்களும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தங்கள் எதிர்பார்ப்பை அஞ்சான் பூர்த்தி செய்யவில்லை என்பதுதான். பார்த்து பழகி, புளித்துப்போன மும்பை தாதா கதையை பின்னணியாககொண்டு அஞ்சான் படம் எடுக்கப்பட்டுள்ளது அசதியை வரவழைப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரம் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை பாராட்டாத ஆட்கள் இல்லை. யுவன் சங்கர் ராஜா இசை மோசமாகிவிட்டதாக விமர்சனங்கள் வெளிவருகின்றன. சமந்தா இந்த திரைப்படத்தில் இதுவரை காட்டாத அளவுக்கு கவர்ச்சியை காண்பித்துள்ளார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் சமந்தாவை பார்ப்பது என்பது, பலாப்பழத்தை, தேனின் ஊரவைத்து சாப்பிடுவதை போல உள்ளதாக இணையதளநண்பர்கள் கருத்தை பகிர்ந்துள்ளனர்.
சிங்கம் மற்றும் சிங்கம்-2 அளவுக்கு மாஸ் திரைப்படமாக இதை பார்க்க முடியவில்லை என்பது சூர்யா ரசிகர்கள் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் போட்டிக்கு பெரிய படங்கள் இறங்காத நிலையில் முதலுக்கு மோசம் இருக்காது என்பது படக்குழுவினரின் கணிப்பாக உள்ளது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கமாட்டேன்.. ஆனால் நடிப்பேன்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்