அஞ்சான் சஸ்பென்ஸ்.. கேட்டாலும் சொல்லிடாதீங்க! - லிங்குசாமி வேண்டுகோள்
சென்னை: அஞ்சான் படத்தின் இறுதிக் காட்சி பற்றி யாருக்கும் சொல்லிடாதீர்கள், விமர்சனத்திலும் எழுதிவிடாதீர்கள் என்று இயக்குநர் லிங்குசாமி மீடியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூர்யா நடித்த அஞ்சான் படம் இன்று வெளியாகியுள்ளது. உலகமெங்கும் 1400 அரங்குகளில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் முதல் காட்சி முடிந்த நிலையில், படம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், மீடியாக்காரர்களுக்கு இயக்குநர் லிங்குசாமி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், 'அஞ்சான் படத்தில் சூர்யாவின் இரட்டை வேடங்களுக்குப் பின்னேயுள்ள சஸ்பென்ஸை வெளியில் சொல்லிவிடாதீர்கள். உங்கள் விமர்சனங்களிலும் அதுபற்றி எழுதிவிடாதீர்கள். ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் போய்விடும்," என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்திரிகைகாரங்களுக்கு சொல்லிட்டீங்க... ஆனா பேஸ்புக், ட்விட்டர் விமர்சகர்களை என்ன பண்ணுவீங்க!


Click it and Unblock the Notifications











