Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு.. 'உண்மை வென்றது..' சுஷாந் சிங்கின் மற்றொரு காதலி பரபரப்பு போஸ்ட்!
மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, நடிகர் சுஷாந்தின் முன்னாள் காதலி, பரபரப்பு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுஷாந்தை அதைச் சொல்லி மிரட்டினார் காதலி ரியா.. தந்தை பகீர் புகார்..மும்பை விரைந்தது பாட்னா போலீஸ்!
மன அழுத்தம்
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் இவர். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா படம் கடந்த 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகி உள்ளது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.
ரியா சக்கரவர்த்தி
சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களை முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.
சுஷாந்த் சிங் தந்தை
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார். மன அழுத்தத்துக்காக சுஷாந்த் பயன்படுத்திய மாத்திரைகள், மருந்து சீட்டுகளை மீடியாவுக்கு தெரியபடுத்தி விடுவேன் என்றும் அதன் மூலம் பைத்தியமாக நிரூபித்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.
திஷா தற்கொலை
இதை, தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார் சுஷாந்த். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை யாரும் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்றும் சுஷாந்த் சகோதரியிடம் கூறியுள்ளார். சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, நடிகை ரியாதான் கையாண்டு வந்துள்ளார். சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, ரியாவுக்கு 15 கோடி ரூபாய் வரை, பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சுஷாந்தின் தந்தை தெரிவித்துள்ளார்.
பாட்னா போலீசார்
இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்குத் தூண்டியது உட்பட சில பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரிடமும், அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமின் கோரி, ரியா கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கிதா லோகண்டே
இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேறு எதையுமே குறிப்பிடாமல், 'Truth Wins' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின், அவர் இதைப் பதிவிட்டதால், பல நெட்டிசன்கள் உண்மையின் பக்கம் கடவுள் எப்போதும் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!