மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்கிற அண்ணாச்சியின் குரல்
சென்னை: தென்னிந்திய சினிமா துறையில் ஒரு முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவரான இமான் அவர்கள் கடந்து வந்த பாதை மிக கடினமானது.
அவர் சினிமாத் துறையில் வருவதற்கு முன்பு சாலையில் காய்கறிகளை விற்று தன்தேவைகளை பூர்த்தி செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். தன்னுடைய கஷ்டங்களை தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு படிப்படியாக முன்னேறினார் நடிகர் இமான் அவர்கள். அண்ணாச்சி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நடிகர் இமான் அவர்கள் தான்.

தன்னுடைய தனித்துவமான குரலாலும் பேச்சாலும் அவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அவர் மக்கள் தொலைக்காட்சியில் தான் முதல் முதலாக "கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" "குட்டீஸ் சுட்டீஸ் "என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. குழந்தைகளிடம் அவர் கேட்கும் கேள்விக்கு குழந்தைகள் சொல்லும் பதில்களும் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் அவர் காமெடியனாக நடித்த முதல் திரைப்படம்" சென்னையில் காதல்" ஆகும். இதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன் , நையாண்டி, அது வேற இது வேற என பல படங்களில் நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் என்று சொல்லி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தொலைக்காட்சியில் பெண்களை மையமாகக் கொண்ட" கல்லாப்பெட்டி" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நடிகர் இமான் . தான் தொகுத்து வழங்கிய எல்லாம் நிகழ்ச்சியும் தனக்கே உரிய பாணியில் நடத்தி அசத்தியவர் நடிகர் இமான் .அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சி மக்களிடையே எவ்வித வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
பேச்சு என்று வந்துவிட்டால் அது எந்த தொலைக்காட்சியாக இருந்தால் என்ன , மக்களை சென்று அடைய வேண்டும் அவ்வளவு தான்.


Click it and Unblock the Notifications











