Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தீவிர பாதுகாப்புடன் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு.. சூப்பர் ஸ்டாரிடம் யாருக்கும் அனுமதி இல்லையாம்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா ஆகியோர் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார்.
பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அசத்தல் அப்டேட்.. வைரலாகும் டிவிட்!
தற்போது ஹைதராபாத்தில் தீவிர பாதுகாப்புடன் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தள்ளிப்போன ரிலீஸ்
2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து இதுவரை வெளிவராமல் உள்ளது. படக்குழு 2021ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது.
அரசியல் களம்
கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கிய படப்பிடிப்பு படகுழுவினர் சிலருக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மட்டுமின்றி ரஜினியின் அரசியல் களம் குறித்த முடிவு, உடல் நிலையை கருத்திற்கொண்டு படப்பிடிப்பை படக்குழு மீண்டும் தள்ளி
போட முடிவு செய்தது
2 வார படப்பிடிப்பு
இதையடுத்து சமீபத்தில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்து விட்டார். ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இடைவெளி இல்லாமல் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்துவருகிறது.
தனிமையில் உள்ளார்
படப்பிடிப்பின் போது ரஜினியிடம் நெருங்க யாருக்கும் அனுமதி இல்லையாம். படப்பிடிப்பில் அனைவருக்கும் PPE suit கொடுக்கப்பட்டுள்ளதாம். தயாரிப்பு நிறுவனமும் , இயக்குனரும் சேர்ந்து சூப்பர் ஸ்டாரை குழந்தையை பார்த்து கொள்ளுவது போல கவனித்து கொள்கிறார்களாம். இயக்குனர் சிவாவும் 4 - 5 அடி தொலைவில் நின்று தான் ரஜினியிடம் பேசுகிறாராம். இவ்வாறாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. படக்குழு மே10ம் தேதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.