Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விநியோகஸ்தரை பிடித்து வைத்து தாக்கியதாக சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு- கைது
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் விநியோகஸ்தரான செல்வராஜ், சேலம் பகுதிக்கான விநியோக உரிமையை தனக்குத் தருவதாக சக்சேனா கூறியிருந்தார். இதற்காக ரூ. 1.25 பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்.
இதைக் கேட்டபோது தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் ஹன்ஸ்ராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சக்சேனாவை 2 நாள் காவலில் எடுத்த போலீஸார் நேற்று விசாரணை முடிவடைந்ததும், சைதாப்பேட்டை 23வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது மேலும் 2 நாள் காவல் கோரப்பட்டது. அதற்கு தான் போலீஸ் காவலில் போக விரும்பவில்லை என்று சக்சேனா கூறவே அதை ஏற்று போலீஸ் காவலை அனுமதிக்க மாஜிஸ்திரேட் சவுமியா ஷாலினி மறுத்தார்.
இதையடுத்து சக்சேனா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடியவில்லை. எனவே ஜாமீன் தரக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்றைக்கு தீர்ப்பை நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்ற பட விநியோகஸ்தரை தீராத விளையாட்டுப் பிள்ளை பட விநியோகம் தொடர்பாக பிடித்து வைத்து சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் தாக்கியதாக புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் அய்யப்பனையும் போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவரையும் இன்றைக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சக்சேனாவும், அய்யப்பனும் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!