Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
’பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து இன்னும் ஒரு தரமான அப்டேட் கொடுத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்
சென்னை; மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'பொன்னி நதி' பாடல், பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படம் குறித்த சிறப்பு அப்டேட் ஒன்று ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
கனடாவில் அடுத்தடுத்த கச்சேரிகள்.. ரசிகர்களை கட்டிப் போட்ட ஷிவாங்கி!
நினைத்ததை சாதித்த மணிரத்னம்
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நாவலை படமாக ஏடுக்க வேண்டும் என்ற கனவு, எம்.ஜி.ஆர், கமல் என பலரும் முயற்சித்தனர். இறுதியில் இந்த கனவை தற்போது இயக்குநர் மணிரத்னம் நனவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நட்சத்திரப் பெருங்கூட்டம்
பொன்னியின் செல்வன் படம் சூட்டிங் தொடங்கியதில் இருந்தே, இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்தும் அதிகமானது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், ரகுமான் என நடிகர்களின் பட்டியல் பொன்னி நதி போல நீண்டுகொண்டே சென்றது. இப்படி பெரும் நட்சத்திரங்களை வைத்து, மொத்தமே 120 நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம்.
ஏ.ஆர். ரஹ்மானின் பொன்னி நதி
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அவரே பாடியிருந்த இந்தப் பாடல், யூடியூப்பில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்பாடல் கார்த்தியின் இன்ட்ரோ சாங் என்பதும் உறுதியாகியுள்ளது.
அமர்க்களமான அப்டேட் இதோ
ரஹ்மானின் இசையில் 'பொன்னி நதி' பாடல் ரசிகர்களை பரவசப்படுத்தி வருவது ஒருபக்கம் இருக்க, இரண்டாவது சிங்கிள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்தப் படத்தின் பின்னணி இசைக்கான ஆடியோ மிக்ஸிங் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆடியோ மிக்ஸிங்காக ஹாலிவுட்டில் இருந்து வந்திருந்த பிரபல Greg Townley, அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக, ரஹ்மானின் ஸ்டூடியோவில் இருந்து போட்டோ போட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.