Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அடுத்த "S" போட்டியாளர்
சென்னை : பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து S என்ற எழுத்தில் பெயர் கொண்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இந்த வாரமும் மற்றொரு S போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஜனவரி 31 ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சினிமா ஷுட்டிங் காரணமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் கமல்.
வெந்து தணிந்தது காடு...போஸ்டருடன் அடுத்த கேரக்டர் அறிமுகம்...யாரு தெரியுமா?
நெருங்கும் ஃபைனல்ஸ்
தற்போது கமலுக்கு பதில் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களைக் கடந்து கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது பிக்பாஸ் அல்டிமேட். டாஸ்குகளும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதனால் போட்டியாளர்களிடையே மோதலும் கடுமையாகி வருகிறது. ஆரம்பத்தில் 14 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
வெளியேறிய போட்டியாளர்கள்
இதில் சுஜா வருணி, சுரேஷ் சக்கரவர்த்தி, தாடி பாலாஜி, சிநேகன், அபினய், ஷாரிக், அனிதா ஆகியோர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்ட சுரேஷ் தாத்தா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தார். போட்டியாளர்களால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வனிதா விஜயக்குமார் பாதிலேயே வெளியேறினார். அவரைப் போல் சுரேஷ் தாத்தாவும் உடல்நிலையை காரணமாக சொல்லி பாதியில் வெளியேறினார்.
இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர்
வைல்ட் கார்டு என்ட்ரியாக கலக்க போவது யாரு சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் தீனா ஆகியோர் அடுத்த வைல்ட் கார்டு என்ட்ரியாக அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் பாலா, ஜுலி, சதீஷ், சுருதி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் மிகக் குறைந்த ஓட்டுக்களுடன் இந்த வாரம் சதீஷ் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலா தான் டாப்
இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் அதிக ஓட்டுக்களுடன் பாலா தான் முதல் இடத்தில் இருக்கிறாராம். டாஸ்குகளின் போது பெண் போட்டியாளர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாக பாலா மீது தான் அதிக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பாலா டாப்பில் இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாலாவை தொடர்ந்து ஜுலி, சுருதி ஆகியோர் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளனர். வீட்டில் உள்ள போட்டியாளர்களிலேயே சதீஷ் மற்றும் அபிராமி மிக குறைவான ஓட்டுக்களுடன் பின்னால் உள்ளதாக கூறப்படுகிறது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!