கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கி எடுத்த கேரளத்து கப்பக்கிழங்கு!
சென்னை : இதுவரை நடிகையாக மட்டுமே பலராலும் அறியப்பட்ட நடிகை அனுபமா பரமேஸ்வரன், மனியாரயிலே அசோகன் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழில் கொடி திரைப்படத்திற்கு பிறகு இப்போது அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தெலுங்கிலும் எக்கச்சக்க படங்களில் நடித்து வரும் இவர் வீட்டில் வளர்த்த கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கிய குஷியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மாபெரும் வெற்றி
மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

அதர்வா ஹீரோவாக
மலையாளம்,தமிழை விடவும் தெலுங்கில் இவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் குவிந்து வர கை நிறைய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தள்ளிப் போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

மனியாரயிலே அசோகன்
இதுவரை நடிகையாக மட்டுமே அனைவராலும் அறியப்பட்ட அனுபமா பரமேஸ்வரன் மனியாரயிலே அசோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். விரைவில் திரைப்படம் ஒன்றையும் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.

எங்க வீட்டில் வளர்ந்தது
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்தியாவை கலக்கிக்கொண்டு இருக்கும் அனுபமா தற்பொழுது வீட்டில் வளர்த்த கப்பக்கிழங்கை வேரோடு பிடுங்கி கையில் வைத்துக்கொண்டு அதே குஷியில் எங்க வீட்டில் வளர்ந்த கிழங்கு என போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











