கண்ட இடத்தில் தொட்டார்: பிரபல இயக்குனர் மீது இளம் ஹீரோயின் பரபர புகார்
மும்பை: பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக நடிகை அனுஷ்கா சர்மா புகார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் காபி வித் கரண் என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சில பல உண்மைகள் வெளி வந்தன.

கரண்
கரண் ஜோஹார் இயக்கத்தில் அனுஷ்கா ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை இயக்கியபோது அனுஷ்கா மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக கரண் தெரிவித்தார்.

அனுஷ்கா
கரண் தன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக கூறியதை கேட்டு நான் நிஜமாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் கரண் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கலாம் என்று இருந்தேன் என்றார் அனுஷ்கா.

தொட்டு
கரண் சில சமயங்களில் என்னை கண்ட கண்ட இடத்தில் தொட்டுள்ளார் என்றார் அனுஷ்கா. இதை கேட்ட கத்ரீனா கரணை காப்பாற்றும் விதமாக, உங்களுக்குள் உள்ள தீயை தூண்டிவிட அப்படி செய்திருப்பார் என்றார்.

ஜாக்குலின்
என்னை மட்டும் அல்ல நடிகை ஜாக்குலினையும் கண்ட இடத்தில் தொட்டுள்ளார் கரண். மனிஷ் மல்ஹோத்ராவின் பார்ட்டியில் ஜாக்குலினே இதை தெரிவித்தார் என்று அனுஷ்கா கூறினார்.

சட்ட விஷயம்
சட்ட விஷயங்களை பின்னர் ஒரு நாளில் மெதுவாக பேசிக் கொள்ளலாம். நான் உங்கள் இருவர் மீதும் அன்பு வைத்துள்ளேன். உங்களுக்கு எதுவும் கெட்டது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேன் என்று கூறி சமாளித்தார் கரண்.


Click it and Unblock the Notifications











