Don't Miss!
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பொன்னியின் செல்வன்: நோ சொன்ன நயன், 'பூங்குழலி'யாகும் அனுஷ்கா?
Recommended Video
சென்னை:பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத் தயாராகி வருகிறார். ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக கீர்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடிக்க உள்ளனர் என்று செய்திகள் வெளியாகின.
பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருப்பதால் பொன்னியின் செல்வன் படத்திற்கு மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் உள்ளாராம். அதனால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதையடுத்து பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை அணுகி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. முன்னதாக விஜய் சேதுபதியும் டேட்ஸ் பிரச்சனையால் தான் இந்த படத்தில் இருந்து விலகினார்.
கதை சொல்ல வரும் இயக்குநர்களை முகம் சுளிக்க வைக்கும் நடிகை
படப்பிடிப்பை துவங்க மணிரத்னம் ஏற்பாடுகள் செய்து வருகிறார். ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கக் கூடாது. அதுவும் மணி சார் ஸ்டைலுக்கு அது செட்டாகாது என்று ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் மணிரத்னத்தின் நடிகர்கள், நடிகைகள் தேர்வு சரியில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.