அப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா?
Recommended Video

ஹைதராபாத்: அனுஷ்காவும், பிரபாஸும் நண்பர்கள் இல்லை அதையும் தாண்டி என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட இருவருமே முதலில் கண்டுகொள்ளவில்லை.
பின்னர் பிரபாஸ் மட்டும் விளக்கம் அளித்தார்.

அனுஷ்கா
அனுஷ்காவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவர் என் குடும்ப நண்பர், மற்றபடி எங்களுக்கு இடையே எதுவும் இல்லை என்று பிரபாஸ் விளக்கம் அளித்தார். ஆனால் அவரின் விளக்கத்தை ஏற்க யாரும் தயாராக இல்லை.

பிரபாஸ்
பிரபாஸ் அபுதாபியில் சாஹோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அனுஷ்காவோ ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை கழிக்க கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக உள்ளார்களே, ஏதாவது பிரச்சனையோ என்ற பேச்சு கிளம்பியது.

காதல்
எவ்வளவு பிசியாக இருந்தாலும் அனுஷ்காவும், பிரபாஸும் டச்சில் தான் உள்ளார்களாம். அவர்களுக்கு இடையே பிரச்சனை எதுவும் இல்லையாம். மாறாக காதல் மேலும் வலுவடைந்துள்ளதாம்.

திருமணம்
அனுஷ்காவும், பிரபாஸும் அவ்வப்போது வீடியோ கால் செய்து பேசிக் கொள்கிறார்களாம். பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று அவரது பெரியப்பா கூறிய நிலையில் அந்த பெண் அனுஷ்காவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விருப்பம்
அனுஷ்காவும், பிரபாஸும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தால் அவர்களின் ரசிகர்களை விட வேறு யாரும் அதிக மகிழ்ச்சி அடைய முடியாது.


Click it and Unblock the Notifications











