Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னை அழகாக்கியவரே... அன்பான ஆத்மாவே... மேக்கப்மேன் மரணத்துக்கு ஹீரோயின் உருக்கம்!
மும்பை: பிரபல மேக்கப்மேன் மரணமடைந்ததை அடுத்து, உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.
பிரபல மேக்கப் மேன், சுபாஷ் வாகல் (Subhash Vagal). சுப்பு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், மும்பையை சேர்ந்தவர். இந்தி சினிமாவின் டாப் ஹீரோயின்களான அனுஷ்கா சர்மா, கரீனா கபூர், தபு, பிரீத்தி ஜிந்தா, காஜல் அகர்வால், சோனம் கபூர், அதிதி ராவ் ஹைதாரி, கேத்ரினா கைப் உட்பட பலருக்கு மேக்கப்மேனாக பணியாற்றி வந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக இவர் நேற்று மரணமடைந்தார். இந்தி திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை அனுஷ்கா சர்மா எழுதியுள்ள உருக்கமான இரங்கல் செய்தியில், சுப்பு எளிமையானவர். கனிவானவர், மென்மையானவர். புத்திசாலியான மேக்கப்மேன். அவரை மேஸ்ட்ரோ என்றே அழைப்பேன். நாட்டின் மரியாதைக்குரிய மேக்கப்மேனாக அவர் எப்போதும் கருதப்படுவார்.
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
திறமையான மேக்கப் கைகள் மூலம், என்னை ஒவ்வொரு முறையும் அழகாகக் காட்டியவர் அவர்தான். அவர் விட்டுச்சென்ற அழகான பணிகள் நினைவுக் கூரப்படும். அற்புதமான மகன், அன்புச் சகோதரன், அழகான ஆத்மா நம்மை விட்டுச் சென்றுவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
இதே போல காஜல் அகர்வால், கேத்ரினா கைப் உள்ளிட்ட நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.