Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொலை செய்ய சதி.. பாதுகாப்பு கேட்கும்.. நடிகை அனுஷ்காவின் சகோதரர்!
சென்னை : பிரபல நடிகை அனுஷ்காவின் சகோதரருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதை அடுத்து அவர் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தெலுங்குத் திரைப்படமான சூப்பர் மூலம் கடந்த 2005 -ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார் அனுஷ்கா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளன.
அனுஷ்கா ஷெட்டி தனது நடிப்புகளில் ஒரு நந்தி விருது , ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் மூன்று பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட எக்கசக்க பார்ட்டுகளை பெற்றுள்ளார். . கிட்டத்தட்ட 47 திரைப்படங்களுக்கு மேல் பலத்திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். மேலும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக அனுஷ்கா ஷெட்டி இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம்...என்ன நடக்க போகுதோ?
இவர் நடிப்பில் வெளியான பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியிருந்த நிசப்தம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. தற்போது, இவருக்கு படவாய்ப்பு இல்லாததால் இவருக்கு மாப்பிள்ளை வேலையில் குடும்பத்தார் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி கொலை மிரட்டல் வந்துள்ளதால், அவர் போலீஸ் பாதுகாப்புகேட்டுள்ளார். அனுஷ்கா ஷெட்டி சகோதர், ஜெய கா்நாடகா ஜனபர வேதிகே என்ற அமைப்பின் தலைவரான முத்தப்பா ராயின் நெருங்கிய ஆதரவாளராக இருக்கிறார்.
இவரை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு, ஜெய கர்நாடக அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். குணரஞ்சன் ஷெட்டியும் தன்னை கொலை செய்ய சதித்திட்டம் நடப்பதாகவும், கவனமுடன் இருக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகளில் தெரிவித்திருந்தார்.
முத்தப்பா ராயின் மற்ற ஆதரவாளர்களான மன்வித் ராய், ராகேஷ் மல்லி ஆகியோருக்கும் குணரஞ்சன் ஷெட்டிக்கும் பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன்வித், ராகேஷ் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பெரிய முதலையிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் சின்ன மீன்கள்.. பேராசை பெருநஷ்டமாகிடுச்சே!
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!