Don't Miss!
- News இந்தியக் குடியுரிமையைப் போராடிப் பெற்ற பெண்! நிஜத்தில் ஒரு ‘சர்க்கார்’ நாயகி!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!
ஐதராபாத்: பெண் போலீஸ் அதிகாரிகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.
'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!
இப்போது படங்களில் நடிக்காமல் இருக்கும் அவர், அடுத்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சைபராபாத் கமிஷனர்
இதற்கிடையே அவர் ஐதராபாத்தில் நடந்த பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் தலைமையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.
ரீல் நட்சத்திரம்
இதில் சிறப்பு விருந்தினராக நடிகை அனுஷ்கா, கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, திரையில் எங்களை ஸ்டார்களாக காட்டினாலும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தான் நட்சத்திரம். நாங்கள் ரீல் நட்சத்திரங்கள், நீங்கள் ரியல் நட்சத்திரங்கள்.
அதிகாரிகள்
உங்கள் கடும் முயற்சி மற்றும் உழைப்பால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். உங்கள் தியாகங்கள் உயர்வானவை. இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் நான் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன்' என்று குறிப்பிட்டார். பெண் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்காக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
பெண் செக்யூரிட்டி
இதில் 750-க்கும் அதிகமான பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஷீபஹி ('SHEpahi') என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவசர எண் 100 வாகனங்கள் மற்றும் ஷீ பேருந்து வசதியும் துவக்கி வைக்கப்பட்டன. ஐடியில் பணியாற்றும் பெண்களுக்கான இந்த ஷீ பேருந்தை பெண் டிரைவர் இயக்குவார். பெண் செக்யூரிட்டியும் இதில் இருப்பார்கள்.