கோஹ்லியை பிரிந்த பிறகும் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்யும் அனுஷ்கா... ட்விட்டரில்
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பிரிந்து சென்ற பிறகும் அவரை ட்விட்டரில் தொடர்ந்து ஃபாலோ செய்கிறார் நடிகை அனுஷ்கா சர்மா.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். கோஹ்லி தனது காதலியை இந்த ஆண்டே மனைவியாக்க ஆசைப்பட்டார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.
அனுஷ்காவோ சினிமா படங்களில் கவனம் செலுத்த வேண்டும் அதனால் தற்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

கோஹ்லி
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களின் காதல் முறிந்துள்ளது. கோஹ்லி அனுஷ்கா மீது செம கடுப்பில் உள்ளாராம்.

இன்ஸ்டாகிராம்
அனுஷ்காவை பிரிந்த வேகத்தில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.

அனுஷ்கா
கோஹ்லியை பிரிந்தாலும் அனுஷ்கா அவரை ட்விட்டரில் இன்னும் ஃபாலோ செய்து கொண்டு தான் இருக்கிறார்.

யாருக்கு?
அனுஷ்காவும், கோஹ்லியும் பிரிந்ததில் ஒரு வாலிபருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறப்படுகிறது. யாருப்பா அது?


Click it and Unblock the Notifications











