Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கோஹ்லி மனைவி மாதிரி நம்ம அனுஷ்காவுக்கு தெளிவு இல்லை
சென்னை: பாலிவுட் நடிகை அனுஷ்கா போன்று நம்ம அனுஷ்கா தெளிவு இல்லை என்கிறார்கள்.
பிரபாஸும், அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பல மாதங்களாக பேசப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் பாகுமதி பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா கூறியதாவது,
பாகுமதி
பாகுபலி படத்திற்கும் பாகுமதி படத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. பாகுமதி படத்தில் சஞ்சனா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறேன். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
நடிகர்
தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் பாகுமதி படத்தை பிடிக்கும். கோலிவுட்டில் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அதற்காக மற்றவர்களை பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.
காதல்
நானும் பிரபாஸும் காதலிக்கவில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவு தான். அவரும், நானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.
மாப்பிள்ளை
திருமணம் செய்யுமாறு கூறி என் குடும்பத்தார் நெருக்கடி கொடுக்கவில்லை. நல்ல பையன் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன். ரசிகர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் தான் என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.
தெளிவு
கோஹ்லியை காதலித்தபோது அனுஷ்கா பட நிகழ்ச்சிகளுக்கு வந்தால் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசவே மாட்டார். அப்படி பேசினால் படத்தை விட்டுவிட்டு அவரின் காதல் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்பது தான் காரணம். நம்ம அனுஷ்காவோ பாகுமதியை விளம்பரம் செய்ய வந்த இடத்தில் காதல் பற்றி பேசியதால் அனைவரும் படத்தை விட்டுவிட்டு காதலை பிடித்துக் கொண்டனர்.