Don't Miss!
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதிங்க!
- News எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'நண்பன்' ஷூட்டிங்கில்.. அதற்குப் பிறகுதான் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன்.. பிரபல நடிகை விளக்கம்!
சென்னை: முதலில் தயங்கிய நான், அதற்குப் பிறகுதான் நடிகர் விஜய்யின் கன்னத்தில் அறைந்தேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியில் ஆமிர்கான், மாதவன், சர்மான் ஜோஷி, கரீனா கபூர் உட்பட பலர் நடித்த படம், 3 இடியட்ஸ்.
விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருந்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது.
திருமணம் செய்வதாகப் பழகி மோசடி முயற்சி.. பிரபல நடிகைக்குத் திடீர் மிரட்டல்.. 4 பேர் அதிரடி கைது!
ஹாரிஸ் ஜெயராஜ்
இது தமிழில் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஷங்கர் இயக்கி இருந்தார். ஜீவா, ஶ்ரீகாந்த், சத்யன், சத்யராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இலியானா ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் சகோதரியாக அனுயா நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
நடிகை அனுயா
இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த சம்பவம் ஒன்றை நடிகை அனுயா இப்போது தெரிவித்துள்ளார். இவர், ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து ஹரிகுமாரின் மதுரை சம்பவம், சுந்தர்.சியின் நகரம், நஞ்சுபுரம், விஜய் ஆண்டனியின் நான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
முதலில் தயங்கினேன்
அவர் கூறும்போது, 'விஜய்யின் நண்பன் படத்தில், கதைப்படி எனக்கு பிரசவ நேரம். கடுமையான மழை வேறு. சாலைகளில் வெள்ளம். ஆம்புலன்ஸ், வாகனங்கள் கிடைக்காது. இதனால், நடிகர் விஜய் எனக்குப் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது விஜய்யை, நான் வேகமாகக் கன்னத்தில் அறைவேன். இந்தக் காட்சியை படமாக்கும்போது, முதலில் தயங்கினேன்.
வேகமாக அறைந்தேன்
எப்படி தளபதியை அடிப்பது என்று யோசித்தேன். அதனால் நான் மெதுவாக அவர் கன்னத்தில் தட்டினேன். உடனே, இயக்குனர் ஷங்கர் சார், நீங்க நல்ல நடிகை என்று நினைத்தேன் என்றார். பிறகு அவரை எப்படி நான் அறைவது? என்று சொன்னேன். 'இது நடிகர் விஜய் இல்லை, படத்தில் வரும் பாரி வேந்தன் கேரக்டர். அப்படி நினைத்துக்கொண்டு அடியுங்கள்' என்றார் ஷங்கர். பிறகு அவரை வேகமாக அறைந்தேன்' என்று கூறியுள்ளார்.