Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்: நடிகை பேட்டி
மும்பை: என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அவர் அந்த தொடரை தயாரித்த சஞ்சய் கோஹ்லி என்பவர் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து ஷில்பா கூறுகையில்,
தற்கொலை
நான் ரொம்பப் பட்டுட்டேன். என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் பலவிதமாக பேசுவார்கள்.
பணம்
நான் பணம் அல்லது வேறு எதற்காகவோ பாலியல் புகார் கொடுத்துள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே போன்று நடப்பது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலியல் தொல்லை
என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லை குறித்து பேசுவது சுலபம் அல்ல. பாலியல் தொல்லை குறித்து வாய் திறக்காமல் இருக்கச் சொல்வார்கள். அப்படியும் பேசினால் இத்தனை நாள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்பார்கள்.
காத்திருக்காதீர்கள்
பாலியல் தொல்லை நடந்தால் அமைதியாக இருக்காதீர்கள். துணிந்து பேசுங்கள் என்பதே பெண்களுக்கு நான் அளிக்கும் அறிவுரை. இது குறித்து பேசுவது எளிது அல்ல என்பதால் பெண்கள் தயங்குவது எனக்கு புரிகிறது என்றார் ஷில்பா.