Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள்: நடிகை பேட்டி
மும்பை: என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பாபி ஜி கர் பர் ஹை என்ற பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தவர் ஷில்பா ஷிண்டே. அவர் அந்த தொடரை தயாரித்த சஞ்சய் கோஹ்லி என்பவர் மீது மும்பை போலீசில் பாலியல் தொல்லை புகார் கொடுத்தார்.
இந்நிலையில் இது குறித்து ஷில்பா கூறுகையில்,
தற்கொலை
நான் ரொம்பப் பட்டுட்டேன். என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் பலவிதமாக பேசுவார்கள்.
பணம்
நான் பணம் அல்லது வேறு எதற்காகவோ பாலியல் புகார் கொடுத்துள்ளதாக மக்கள் நினைக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே போன்று நடப்பது இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலியல் தொல்லை
என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் தொல்லை குறித்து பேசுவது சுலபம் அல்ல. பாலியல் தொல்லை குறித்து வாய் திறக்காமல் இருக்கச் சொல்வார்கள். அப்படியும் பேசினால் இத்தனை நாள் ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்பார்கள்.
காத்திருக்காதீர்கள்
பாலியல் தொல்லை நடந்தால் அமைதியாக இருக்காதீர்கள். துணிந்து பேசுங்கள் என்பதே பெண்களுக்கு நான் அளிக்கும் அறிவுரை. இது குறித்து பேசுவது எளிது அல்ல என்பதால் பெண்கள் தயங்குவது எனக்கு புரிகிறது என்றார் ஷில்பா.