Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்
அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா. இவர் 1996ஆம் ஆண்டு சினிமா பைனான்சியர் போத்ராவிடம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பி செலுத்த காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து சொர்ணா மீது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா மோசடி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சொர்ணா ரூ.2 லட்சத்தை டெபாசிட் செய்தார். மீதிப்பணத்தை செலுத்தாததால் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் சொர்ணா மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சொர்ணாவின் தண்டனையை 3 மாதமாக குறைத்தார். மீதிப்பணம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் சொர்ணா. ஆனால் சொர்ணாவின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அதில், போத்ராவுக்கு தர வேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து விட்டேன். பெண் என்பதால் எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, சொர்ணாவுக்கு விலக்களிக்க மறுத்த நீதிபதி, 4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.