Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'மெர்சல்' தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!
சென்னை : 'மெர்சல்' படத்தின் தலைப்பு தொடர்பாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100-வது படமாக விஜய்யை வைத்து ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ள படம் 'மெர்சல்'. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், 'மெர்சலாயிட்டேன்' என்ற பெயரில் நான் படம் தயாரித்து வருகிறேன். ஆகையால் 'மெர்சல்' எனும் டைட்டிலை விஜய் படத்திற்குப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, இரண்டு தலைப்பும் வெவ்வேறானவை, மெர்சல் படத்தை வெளியிடவோ விளம்பரம் செய்யவோ தடையில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ராஜேந்திரன் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.