Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தூக்குச் சட்டி... அப்புக்குட்டி பாராட்டிய குறும்படம்!
சென்னை கடற்கரையில் தூக்கு சட்டியில் சுண்டல் விற்கும் சிறுவனின் வாழ்க்கையை பற்றிய 'தூக்கு சட்டி' குறும்படம் நடிகர் அப்புக்குட்டியை ரொம்பவே கவர்ந்துவிட்டது.
ஏவிஎம் ஸ்டுடியோ தியேட்டரில் நடந்த இந்தப் படத்தின் வெளியீட்டு விழாவில் சினிமா நடிகர்கள், கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மணிசாமி இயக்கத்தில் , கார்த்திக் அஸ்வின் ஒளிப்பதிவில் இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் ஜான் மில்டன். படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டினர்.
இந்த படம் திரையிடலுக்கு பிறகு மேடையில் பேசிய நடிகர் அப்புக்குட்டி, "இந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள் . மனித உணர்வுகளை மிக அழகாக இந்த இளைஞர்கள் இந்த சின்ன படத்திற்குள் காண்பித்திருக்கிறார். அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது .
இன்றைக்கு சினிமா முழுக்க முழுக்க வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒரு தொழிலாகத்தான் அனைவரும் பார்க்கிறரர்கள். ஆனால் ஒரு கலாச்சாரத்தை , பண்பாட்டை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது இந்த சினிமாதான் என்பதை மறந்து விடக்கூடாது. பணம், பணம் என்று அலைகின்ற இந்த மனித வாழ்வின் உணர்வுப் பகுதிகளை நமக்கு ஞாபகப்படுத்துவது இந்த சினிமாதான்.
சினிமா பல பேருக்கு தொழில், சிலருக்கு உணர்வு, சிலருக்கு கனவு , சிலருக்கு கொண்டாட்டம், சிலருக்கு பொழுதுபோக்கு.... இப்படி ஒவ்வொருவரும் சினிமாவை நமக்குள் வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். உணர்வைச் சொல்லுகிறோம் என்கிற பெயரில் படம் பார்க்க வருபவர்களை சிலர் அழவைப்பதும் இங்குதான் . கவலையை மறந்து சந்தோசமாக இருக்கவே சினிமா பார்க்க வருகிறார்கள் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது நம் கடமை. நமது கலாச்சாரம் பண்பாடு , குடும்ப ஒற்றுமை, பாசம் எல்லாம் இன்றைக்கு சினிமா படங்களில் மட்டுமே நிலைத்திருக்கிறது . இது தொடர வேண்டும் கலைகள் மூலமாக மக்களுக்கு பல விஷயங்களை சொல்லலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்போம் நமது பண்பாட்டை காப்போம்," என்று பேசினார் .
நிறைவாக தயாரிப்பாளர் ஜான் மில்டன் , இயக்குநர் மணிசாமி நன்றி தெரிவித்தனர்.