அஜீத் தன் கையால எனக்கு உணவு பரிமாறினார்: நெகிழும் அப்புக்குட்டி
சென்னை: வீரம் படப்பிடிப்பின்போது அஜீத் குமார் தன் கையால் எனக்கு உணவு பரிமாறினார் என்று அப்புக்குட்டி தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார், தமன்னா, சந்தானம் நடித்து வரும் படம் வீரம். தீபாவளிக்கு ஆரம்பம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து வீரம் பொங்கல் விருந்தாக வருகிறது.
இந்நிலையில் வீரம் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

உணவு பரிமாறல்
வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அஜீத் குமார் அப்புக்குட்டிக்கு தன் கையால் உணவு பரிமாறியுள்ளார்.

அப்புக்குட்டிக்கு சந்தோஷம்
அவ்வளவு பெரிய நடிகர் தனக்கு உணவு பரிமாறியது அப்புக்குட்டியை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் அவரால் இந்த சந்தோஷத்தை தாங்க முடியவில்லையாம்.

மங்காத்தா
முன்னதாக அஜீத் மங்காத்தா படப்பிடிப்பின்போது தன் கையாலேயே பிரியாணி செய்து படக்குழுவினருக்கு பரிமாறி அவர்கள் சாப்பிட்ட தட்டுகளை வேறு கழுவி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாணி
ஒரு வேளை அஜீத் பிரியாணி சமைத்து பரிமாறியதால் தான் என்னவோ வெங்கட் பிரபு தனது அடுத்த படத்திற்கு பிரியாணி என்று பெயர் வைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











