மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்!
சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் நேற்று மாலை நலமுடன் வீடு திரும்பினார்.
‘தீனா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராகத் திகழ்கிறார்.

தமிழ், இந்தியில் இவர் இயக்கிய அத்தனைப் படங்களும் வெற்றி பெற்று புதிய வசூல் சாதனைப் படைத்துள்ளன.
இப்போது இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். இதன் இசை செப்டம்பர் 18-ம் தேதி வெளியாக உள்ளது. படம் தீபாவளிக்கு வெளிவருகிறது.
கத்தியின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பின்போது, திடீரென முருகதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த திங்கள்கிழமையன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முருகதாஸ் அனுமதிக்கப்பட்டார்.
உணவு ஒவ்வாமை காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. மருத்துவமனையில் திரையுலக பிரபலங்கள் அவரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். அஜீத், விஜய், சூர்யா மற்றும் சமந்தா ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
சிகிச்சைக்குப்பிறகு முருகதாஸ் இன்று வீடு திரும்பியுள்ளார். மேலும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் படக்குழுவினர், அக்கறையுடன் விசாரித்த நண்பர்கள், விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











