Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஹீரோக்கள் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும்!- ஏ ஆர் முருகதாஸ்
கதாநாயகர்கள் புதிய இயக்குநர்களை அதிகமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று இயக்குநர் முருகதாஸ் கூறினார்.
அதர்வா-கேத்தரின் தெரசா ஜோடியாக நடித்துள்ள படம் கணிதன். புதிய இயக்குநர் டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதில் கலந்துகொண்டு இசையை வெளியிட்டார்.
கத்தி பிரச்சினைகள்
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த விழாவில் பேசுகையில், "நான் இயக்கிய துப்பாக்கி படத்தை எஸ்.தாணு தயாரித்தார். அந்த படம் வெளியானபோது நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அதன்பிறகு கத்தி படத்தை இயக்கினேன். ஒரு கத்தியைத்தான் எடுத்தேன். ஆனால் அந்த படத்துக்கு எதிராக நூறு கத்திகள் வந்தன.
தாணு உதவி
சென்னையில் அந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் குண்டு வெடித்தது. இதனால் கத்தி படம் வருமா? வராதா? என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது எஸ்.தாணு உதவினார்.
புதிய இயக்குநர்கள்
தற்போது என்னிடம் பணியாற்றிய சந்தோஷை கணிதன் படம் மூலம் டைரக்டராக்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய எல்லோரும் டைரக்டர்கள் ஆகிவிட்டனர்.
விஜய் - அஜீத்
அதர்வா புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிக்கிறார். கதாநாயகர்கள் சிக்ஸ்பேக் உடற்கட்டில் வருவது, காலை 9 மணிக்கே படப்பிடிப்புக்கு வருவதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. நல்ல கதைகளை கண்டு பிடித்து நடிக்க வேண்டும். அதர்வா சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். எனக்கு தெரிந்த வரை விஜய், அஜித்குமார் இருவரும்தான் அதிகமான புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்துள்ளனர்.
5-ல் 3
கதாநாயகர்கள் நிறைய புது இயக்குநர்களை அறிமுகம் செய்ய வேண்டும். 5 படங்களில் அவர்கள் நடித்தால் அவற்றில் 3 படங்களை புதுமுக டைரக்டர்களுக்கு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.