Don't Miss!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் திருவிழா..தேரை வடம் பிடித்து இழுத்த ஏ.ஆர் முருகதாஸ்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாமி தரிசனம் செய்தார்
அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தீனா என்ற படத்தை இயக்கி மாஸ் இயக்குநர் என்ற பெருமையுடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஏ.ஆர் முருகதாஸ்.
தீனா படத்திற்கு முன்பு தோல்வி படங்களால் துவண்டு போயிருந்த அஜித்துக்கு இப்படம் மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்தது.
இது சூப்பர் மேட்டரா இருக்கே...ஏகே 63ல் தீனா பட கூட்டணி மீண்டும் இணைய போகிறதா?
ஏ.ஆர்.முருகதாஸ்
தீனா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜயகாந்தை வைத்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, விஜய்யுடன் துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்க்கார், தர்பார் என வெற்றிப்படங்களை கொடுத்தார். தர்பார் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால், விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது, அந்த கதையில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிறப்பு யாகங்கள்
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பிறந்து வளர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அங்கு நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பதியின் ஏற்றம் கொண்ட சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலில் திருபவித்ரோற்வம் விஸ்வக்சேனர், பகவத் சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், மிருத்சங்கிரணம், வாஸ்துசாந்தி, அங்குரார்பணம், பவித்ர பிரதிக்ஞை, வேத திவ்ய பிரபந்தத்துடன் பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து வரும் 7ம் தேதி வரை காலை, மாலையில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெறவுள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
கலச அபிஷேகங்களுக்குப்பின் பெருமாள், தாயார் உள்ளிட்ட 9 சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு 5 நாட்கள் பூஜிக்கப்பட்ட பவித்ர மாலையை சாற்றுகின்றனர். பூஜைகளை தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் செய்கின்றனர். திரைப்பட இயக்குனர் முருகதாஸ் பவித்ரோற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
தேரை வடம் பிடித்து இழுத்தார்
இதில் திருத்தேர் திருவிழாவில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டு தேரை ஹர ஹர கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார். வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விழாவில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்..
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!