Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
எடுக்கிறேன், விஜய்யை வைத்து 'துப்பாக்கி 2' எடுக்கிறேன்: முருகதாஸ்
சென்னை: விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
விஜய், காஜல் அகர்வாலை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
துப்பாக்கி படத்தை முருகதாஸ் இந்தியிலும் ரீமேக் செய்தார். தமிழை போன்றே இந்தியிலும் ஹிட்டானது. இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி 2 படம் எடுக்க உள்ளதாக முருகதாஸ் விருது விழா ஒன்றில் தெரிவித்துள்ளார். சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்கிறார்.
அதன் பிறகு அவர் மீண்டும் முருகதாஸுடன் சேர்ந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முருகதாஸ், விஜய் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணியாகிவிட்டது.
சர்கார் படம் சர்ச்சையில் சிக்கினாலும் அது ஹிட்டாகியுள்ளது. சர்கார் பிரச்சனை இன்னும் தொடர்ந்தாலும் யாரிடமும் மன்னிப்பு கேட்கக் கூடாது என்பதில் முருகதாஸ் உறுதியாக உள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.