Don't Miss!
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாம கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- News சினிமா தியேட்டர் மூடப்படுகிறதா? தமிழகத்தில் திரையரங்க காட்சிகள் ரத்தாகிறதா? சட்டென வெளிவந்த அறிவிப்பு
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சம்பளம் இவ்வளவு தான்.. தயாரிப்பு நிறுவனம் கண்டிஷன்.. அதிர்ச்சியில் முருகதாஸ்!
சென்னை : படத்தின் பட்ஜெட் இவ்வளவு தான், சம்பளமும் இவ்வளவு தான் என தயாரிப்பு நிறுவனம் கூறி இருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் முருகதாஸ்.
Recommended Video
'தீனா' படத்தின் மூலம் அறிமுகமான முருகதாஸ், ரமணா படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குனராக நிலை நிறுத்தி கொண்டவர் அப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்க்கு கதையை மட்டும் கொடுத்தவர் அதன் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து சிரஞ்சீவியை இயக்குமளவிற்க்கு உயர்ந்தார்.
வாத்தி கம்மிங்.. ரோபோ சங்கர் மகளுடன் இறங்கி குத்திய டிக்டாக் வீடியோ !
மற்றொரு பக்கம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற கஜினி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஆமிர் கானை இயக்கினார். அது மாபெரும் வெற்றி பெற இயக்குனர் ஷங்கரால் கூட இந்தியில் சாதிக்க முடியாத உயரத்தை அடைந்தார். தொடர்ந்து அவருக்கு இந்தி வாய்ப்புகள் வர துவங்கின.
அந்த நேரத்தில் விஜயிடத்திலிருந்தும் அழைப்பு வர அவரை வைத்து 'துப்பாக்கி' படத்தினை இயக்கினார். அப்படம் விஜய் திரைப்பட வாழ்கையிலேயே பெரிய மைல்கல்லாக அமைய, அதனை தொடர்ந்து மீண்டும் 'கத்தி' படத்தில் இருவரும் இணைய அதுவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதே வேளையில் இந்தியில் முருகதாஸ் துப்பாக்கி படத்தை ஹாலிடே எனும் பெயரில் ரீமேக் செய்ய அதுவும் பெரும் வெற்றியடைந்தது. இதனால் அவரது சம்பளமும் ஜெட் வேகத்தில் வளர்ந்தது.
எந்த இயக்குனருக்கும் ஏற்றத்தாழ்வு வரும் தானே. அப்படி தான் முருகதாசுக்கு ஸ்பைடர் சரிவாக அமைந்தது. அதனை தொடர்ந்து விஜயை வைத்து இயக்கிய 'சர்கார்', ரஜினியை வைத்து இயக்கிய 'தர்பார்' இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை.
இதனால் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க வேண்டிய படமும் தள்ளி போனது. இந்த நிலையில் மீண்டும் விஜயை சந்தித்தவர் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்ச்சியில் இறங்கி உள்ளார். விஜக்கும் அந்த கதை பிடித்து போக அடுத்து முருதாஸ் படத்தில் நடிக்கிறார் என்று பலரும் சொல்லி கொண்டு வரும் இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முருகதாஸ் 18 கோடி தான் சம்பளம் தர முடியும் எனவும், படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறியிருக்கிறதாம்.
இதற்கு காரணமாக 'சர்கார்' மற்றும் 'தர்பார்' படத்தின் வசூலை சுட்டி காட்டுகிறார்களாம். தனக்கா இந்த நிலை என அதிர்ச்சியில் இருக்கிறாராம் முருகதாஸ். காசு மேலே காசு டைரக்டர் தான் படத்தின் பாஸ் என்று எத்தனை பேர் சொன்னாலும் சில சரிவுகள் சில நேரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். முருகதாஸிடம் பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் உண்மையில் சொன்னார்களா என்று தெரியவில்லை . ஆனால் சினிமா வட்டாரங்கள் கொரோனா வைரஸ் போல் இந்த விஷயத்தை பரப்பி வருகின்றனர். எப்படியோ துப்பாக்கி 2 வெற்றிகரமாக வெளியே வந்தால் சரி.