ஏ. ஆர். ரஹ்மானின் 99 சாங்ஸ்.. நாளை வெளியாகிறது !
சென்னை: ஏ. ஆர். ரஹ்மானின் 99 சாங்ஸ் நாளை வெளியாகிறது ரசிகர்கள் கொண்டாட்டம். இதனை முதல் முறையாக தனது தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிடுகிறார் ரஹ்மான்.
தமிழ் இசையை உலகம் முழுவதும் தெரிய வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்ற தமிழன் ஏ.ஆர். ரஹ்மான். தன் பாடல்களால் இந்திய திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இயக்குநர் மணிரத்னம் இவரை ரோஜா என்ற படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். அன்று துவங்கி இன்று வரை ஒரு மிக பெரிய இசை அமைப்பாளராக நிலைத்து நிற்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் இவர் இசை அமைத்த மெட்டுக்கள் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது.
எல்லோரும் திரைப்படங்களுக்கு இசை அமைக்கலாம் ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் புதியதை ரசிகர்களுக்கு புகுத்தினார். மற்றும் ஹாலிவுட் சினிமாவையே இந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க செய்தார். இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை, அதிகமுறை பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார், ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் கதை எழுதி இசையமைத்து தயாரித்தப்படம் தான் 99 சாங்ஸ். இந்த படத்தில் ஈஹான் பட் மற்றும் இடில்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 4 ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது.

தற்போது ஏ. ஆர். ரஹ்மான் ஒரு புதிய புரோடக்ஷன் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அதில் முதல் ரீலிஸ் ஆக "99 சாங்க்ஸ்" என்ற பெயரில் வெளியாகவுள்ளது, இதில் அவர் பாடலும் எழுதியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதில் மொத்தமாக 14 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஷ்வேஷ் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். ரஹ்மான் பாடல்களுக்கு ரசிகர்கள் மனதில் எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு. அந்த வரிசையில் இந்த பாடல்களும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











