Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்கவேண்டும்..." - ரஜினியின் அரசியல் பற்றி ஏ.ஆர். ரஹ்மான்!
Recommended Video
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு அவருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து ஏழு புதிய குரல் தேடல் என்ற நிகழ்ச்சியை செவன் அப் நிறுவனம் நடத்துகிறது.
பலகட்ட போட்டிகளுக்குப் பின் தேர்வான ஏழு பேருடன், வரும் 12-ம் தேதி சென்னையில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பாட உள்ளார்.
அது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும்; அதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக் கூறினார்.
இசையில் 25 வருடம்
புதிய குரல் தேடல் நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது, இசை பயணத்தில், "25 ஆண்டுகளை முடித்து விட்டோமா என திரும்பி பார்த்தால் வயதானது போலாகி விடும். இனிமேல் தான் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
யூ-ட்யூப் தளங்கள்
சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்துவது சந்தோஷமாக உள்ளது. வரும் 12-ம் தேதி 99% தமிழ் பாடல்களையே, மூன்று மணி நேரம் பாடப்போகிறோம். எதிர்கால தலைமுறையினருக்கு யூ-ட்யூப் போன்ற தளங்கள் பயனுள்ளதாக உள்ளன. நான் கூட சில சமயம் யூ-ட்யூபிலிருந்து தான், நல்ல குரல்களை தேடுகிறேன்.
அரசியலில் நாட்டமில்லை
இந்த இசை நிகழ்ச்சியால் கிடைக்கும் நிதி விவசாயிகளுக்கும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் பயன்பட உள்ளது. அதனால், எல்லோருடைய ஆதரவும் இதற்குத் தேவை. நான் தனிமை விரும்பி என்பதால் அரசியலில் நாட்டமில்லை.
ரஜினியின் அரசியல்
ரஜினியின் அரசியல் வருகை குறித்த பேச்சை நானும் கேட்டேன்; நன்றாக இருந்தது. தமிழகத்திற்கு நல்ல தலைவன் கிடைக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.