Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கண்டுகொள்ளாத தமிழக அரசு... இசைப்புயலைப் பெருமைப்படுத்திய சிக்கிம் அரசு!
Recommended Video
காங்டாக் : சிக்கிம் மாநில அரசு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் அமைச்சருக்குரிய அந்தஸ்தும், அனைத்து கௌரவங்களும் இதன் மூலம் ரஹ்மானுக்கு கிடைக்கும்.
சிக்கிம் தலைநர் காங்டாக்கில் நேற்று நடந்த குளிர்காலத் திருவிழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், ரஹ்மானை சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக பணியாற்றுமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார்.
அதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, "சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு உதாரணமாக திகழ்கிறது. எனக்கு முக்கியத்துவம் தந்து என்னை கவுரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். அதை சிறப்புடன் செய்வேன்" என்றார்.
இன்று அதற்கான அரசு அறிவிப்பு முறைப்படி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மானை தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் இந்தியாவின் பெருமையாகக் கருதுகின்றன. அவருக்கு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகின்றன.
தமிழகத்தின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஆஸ்கர் கலைஞனை தமிழக அரசு விளம்பரத் தூதராக நியமித்து கௌரவப்படுத்தியிருக்க வேண்டாமா? தற்போது வட மாநிலம் ஒன்று அந்தப் பெருமையை ஏற்றிருக்கிறது.