Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கஜா புயல்... கனடாவில் இசை கச்சேரி நடத்தி வசூல் செய்கிறார் ஏஆர் ரஹ்மான்!
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இசை கச்சேரி நடத்த ஏஆர் ரஹ்மான் முடிவு செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளார்.
கஜா புயலின் தாக்குதலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. ஆறு நாட்கள் ஆகியும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக நாகை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
தமிழ் திரைத்துறையை சார்ந்தவர்களும் தங்களுடைய பங்களிப்பை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய பங்காக கனடா நாட்டில் நடைபெறவுள்ள தனது இசை கச்சேரியில் வரும் வசூலில் ஒரு பங்கை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
My Sufi Ensemble and I will perform a benefit concert in Toronto on 24 Dec at Metro Toronto Convention Centre Part of the proceeds will go to for Gaja Cyclone relief in TN I will be joined by Javed Ali, Sivamani & Sana Moussa
— A.R.Rahman (@arrahman) November 20, 2018
Log on to https://t.co/dQwCs6TNu0 for details/tickets
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது," வரும் டிசம்பர் 24ம் தேதி டொரோன்டோவில் நடைபெறவுள்ள என்னுடைய இசை கச்சேரியில் வரும் பணத்தில் ஒரு பங்கு தமிழ்நாட்டின் கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்கப்படும். என்னுடன் ஜாவத் அலி, சிவமணி மற்றும் சானா மோசா ஆகியோரும் இசை கச்சேரியில் பங்கேற்கின்றனர்", என தெரிவித்துள்ளார்.