Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 7 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாவுடன் முதன்முறையாக இணையும் ஏஆர்.ரஹ்மான்... 3 ஹீரோக்கள் சப்ஜெக்ட்!
சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சகாப்தம் இயக்குனர் பாலா. வர்மா திரைப்படத்தினால் சில சரிவுகளை சந்தித்தார்.
இதையடுத்து அவருடைய அடுத்த படம் என்னவாக இருக்கும், எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டபோனது.
அடுத்த படத்திற்கு முதல் முறையாக இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடன் பாலா இணைய போவதாக செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

மீண்டெழுவாரா பாலா?
எப்போதும் சொந்தமாக கதையை தயாரித்து படமெடுக்க கூடியவர் பாலா. முதல் முறையாக நடிகர் விக்ரமுடன் உள்ள நட்புக்காக விக்ரமின் மகன் நடிகர் துருவ்-ஐ வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என மறு ஆக்கம் செய்தார். அந்த படத்தை தயாரிப்பு நிறுவனம் நிராகரித்து பாலாவின் திரை வாழ்வில் ஒரு சரிவை ஏற்படுத்தியது. இந்த சரிவில் இருந்து பாலா மீண்டெழுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கிராமப்புற படம்
பிதாமகன், அவன் இவன் போன்ற டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களை இயக்கிய பாலா முதல் முறையாக மூன்று ஹீரோக்களை வைத்து இயக்க உள்ளார். அதர்வா, உதயநிதி ஸ்டாலின், ஜீ.வி. பிரகாஷ் என மூன்று நடிகர்களை வைத்து கிராமப்புற படமாக தயாராக உள்ளது பாலாவின் அடுத்த படைப்பு.

உதயநிதிக்கு உதயமாக இருக்குமா?
உதயநிதி தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் Article-15 படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் அதையடுத்து இயக்குனர் மகிழ் திருமேனியின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதெல்லாம் முடிந்த பிறகு பாலாவுடன் முதல் முறையாக இணைய உள்ளார் என தெரிகிறது. இது வரையில் உதயநிதியின் நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை அது பாலாவின் படத்தில் மாறி அமையுமா என்பது காத்திருந்து பார்ப்போம்

இரண்டாவது முறையாக
அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளி போகாதே, லோக்கல் ட்ரைன், ஒத்தைக்கு ஒத்த எனவும் ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் பேச்சிளர், ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், காதலை தேடி நித்யானந்தா என படவரிசை நீண்டுள்ளது. பாலாவுடன்அதர்வா பரதேசி படத்திலும், ஜீ. வி. பிரகாஷ் நாச்சியார் படத்திலும் இணைந்து பணியாற்றி உள்ளனர். அதர்வா - ஜீ.வி. பிரகாஷ் ஆகியோர் பாலாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.