Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கபில் சிபல் எழுதி ரஹ்மான் இசையமைத்த ரானாக் ஆல்பம் - சல்மான்கான் வெளியிட்டார்!
மும்பை: ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் எழுதிய பாடல்கள் இடம்பெற்ற ரானாக் என்ற புதிய இசை ஆல்பத்தை நடிகர் சல்மான்கான் மும்பையில் வெளியிட்டார்.
கபில் சிபலின் கவிதைகளுக்கும் ரஹ்மானின் இசைக்குமான ஒரு இனிய உரையாடலாக அமைந்த இந்த ஆல்பத்தில், ரஹ்மானின் குரல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்தான் இந்த ஆல்பத்தின் பாடல்களை ஒரு கதையாக ஆல்பம் முழுக்கச் சொல்லியிருக்கிறார்.
இந்த ஆல்பத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பாரத் ரத்னா விருது பெற்ற லதா மங்கேஷ்கரும், ஸ்ரேயா கோஷலும், ஜோனிதா காந்தியும் பாடியுள்ளனர். ஏ ஆர் ரஹ்மானும் பாடியுள்ளார்.
இந்த ஆல்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக நடந்தது. ஆல்பத்தை வெளியிடும் சோனி நிறுவனம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அமைச்சர் கபில் சிபல், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க, நடிகர் சல்மான் கான் ஆல்பத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரஹ்மான், "எனது கற்பனைக்கும் இசைக்கும் ஏற்றமாதிரி ஒரு ஆல்பம் ரானாக். இது போன்ற ஒரு வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். அமைச்சர் கபில் சிபலின் இந்த பாடல் வரிகளைக் கேட்டதும், அதற்கேற்ற இசை எனக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது," என்றார்.
அமைச்சர் கபில் சிபல் பேசுகையில், "ரஹ்மான் என்றாலே உணர்ச்சி, இயல்பான அழகு, இறையுணர்வுதான் மனதில் தோன்றும். இசையோடு கலந்தவர் அவர். தான் செய்யும் அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். அவரது மேதைமை என் வரிகளுக்கு உயிர் தந்துள்ளது," என்றார்.
வந்தே மாதரம் இசை ஆல்பம் தொடங்கி, தங்கள் நிறுவனத்துடனான ரஹ்மானின் தொடர்பை நினைவுபடுத்திப் பேசினார் சோனி இசை நிறுவனத்தின் ஸ்ரீதர் சுப்ரமணியம்.