Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாட ஆசையா.. இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
சென்னை: இசையில் ஆர்வமுள்ளவர்கள் ரஹ்மானின் இசையில்பாட ஒரு அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.
தன்னுடைய இசையில் புதுமைகளை புகுத்தி வரும் ஏஆர்.ரஹ்மான் புதுப் புது பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் அடுத்ததாக இளம் பாடகர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார். யூட்யூப் இந்தியாவும், ஏஆர்.ரஹ்மானும் இணைந்து திறமையான இளம் பாடகர்களை கண்டெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
ஏஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள வலைதளப்பக்கத்திற்கு சென்று, ரஹ்மானின் இசையில் பாட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Is your passion for music authentic? Then it’s time you ARRived on the big stage! @YouTubeIndia and I are looking for the next great singing star. If you think you're it, send in your entries here → https://t.co/5T5ZmgyqE7 #ARRivedSeries pic.twitter.com/odXQ2B3vd9
— A.R.Rahman (@arrahman) September 13, 2018
பெயர், தொடர்பு எண், இ-மெயில் ஐடி மற்றும் உங்களுடைய வீடியோ ஆகியவற்றை பதிவேற்றி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பாடல் வீடியோ மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. தனியாக பாடிய வீடியோ மட்டுமே அனுப்ப வேண்டும். முக்கியமாக பாடும் மொழி இந்தியில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
விண்ணப்பிக்க விரும்பும் போட்டியாளர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
விண்ணப்பிக்கப்படும் போட்டியாளர்களிலிருந்து 100 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு நான்குபேர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். அதில் தேர்வு பெறும் போட்டியாளர் ஏஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பைப் பெறுவார்.
இந்த நிகழ்ச்சியை க்யூக்கி என்ற நிறுவனம் நடத்துகிறது. நிகழ்ச்சி முழுவதும் மும்பையில் நடைபெறும் என்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் மும்பைக்கு செல்ல வேண்டும் என்பதும் கட்டாய விதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.