Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும், விடியும் உள்ளம் மயங்காதே! - ஏ ஆர் ரஹ்மான்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தார் ஏஆர் ரஹ்மான்.
திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மவுனப் போராட்டம் நடந்தது. இதில் ரஜினி, கமல், அஜீத் என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நோன்புக்கு இடையில் 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'தமிழா, தமிழா கண்கள் கலங்காதே - விடியும், விடியும் உள்ளம் மயங்காதே' பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி ட்விட்டரில் வெளியிட்டார் ரஹ்மான்.
மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.