Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும், விடியும் உள்ளம் மயங்காதே! - ஏ ஆர் ரஹ்மான்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தார் ஏஆர் ரஹ்மான்.
திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மவுனப் போராட்டம் நடந்தது. இதில் ரஜினி, கமல், அஜீத் என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நோன்புக்கு இடையில் 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'தமிழா, தமிழா கண்கள் கலங்காதே - விடியும், விடியும் உள்ளம் மயங்காதே' பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி ட்விட்டரில் வெளியிட்டார் ரஹ்மான்.
மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.