Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஸ்கார் விருதுகளை தொலைத்து, மீண்டும் பெற்றேன்... ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன 'பகீர்' தகவல்
சென்னை : இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 2009 ம் ஆண்டு படைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் ஒரே மேடையில், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றார்.
ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒன்று அந்த படத்தின் பின்னணி இசைக்காக. மற்றொரு விருது, உலக அளவில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அதே படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசை அமைத்ததற்காக.
ரஹ்மான் சொன்ன அதிர்ச்சி தகவல்
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், தான் ஆஸ்கார் விருதுகளை தொலைத்து விட்டு, பிறகு மீண்டும் பெற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட இந்த ரகசிய தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அம்மா பாதுகாத்த விருது
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதனை கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், எப்படி ஆஸ்கார் விருது தொலைந்தது, பிறகு எவ்வாறு கிடைத்தது என்ற கதையையும் விளக்கமாக கூறி உள்ளார். அவர் கூறுகையில், எனது அம்மா தான் ஆஸ்கார் விருதுகளை பத்திரமாக ஒரு துணியில் சுற்றி, அலமாரி ஒன்றில் வைத்திருந்தார். நான் அதை வாங்கியது முதல் அது தங்கத்தால் செய்யப்பட்டது என்றே அவர் நினைத்திருந்தார்.
மறந்து போன விருதுகள்
அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு பல ஆண்டுகள் அந்த விருதை பற்றி நான் நினைக்கவேயில்லை. சமீபமாக அம்மா இறக்கும் வரை நான் அதை பற்றி நினைக்கவேயில்லை. 2020 டிசம்பரில் அம்மா கரீமா பேகம் காலமானார். அதனால் அம்மா வீட்டில் இருந்த ஆஸ்கார் விருதுகளை எனது வீட்டிற்கு எடுத்து வந்து விடலாம் என நினைத்தேன்.
தொலைந்து, மீண்டும் கிடைத்தது எப்படி
ஆனால் அம்மா வைத்திருந்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த அந்த அலமாரியில் விருதுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், பல இடங்களில் தேடி பிறகு, கடைசியாக விருதுகளை தொலைத்து விட்டோம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அப்போது எனது மகன் ஏ.ஆர்.அமீன், அந்த விருதுகள் மற்றொரு அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.